search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூந்தல் பிரச்சனை"

    • கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
    • இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

    இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.

    செய்முறை:

    முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.

    தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.

    எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

    • பெண்களை கவலை கொள்ளும் விஷயம் கூந்தல் உதிர்வு.
    • பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்சனை வருகிறது.

    தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன.

    இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்:

    1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது அய பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி. எடுத்துக்கொண்டு இவற்றுடன் கரிசாலை சூரணம் ஒரு கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) தலைக்கு செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தேய்த்து குளித்து வர வேண்டும்.

    3) வாரம் ஒரு முறை கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனால் பொடுகு, உடல் சூடு நீங்கும், உடல் குளிர்ச்சி அடையும், கண் ஒளி கூடும்.

    உணவில் முட்டை, பால், கருவேப்பிலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பச்சைப் பட்டாணி, முருங்கை கீரை, வேர்க் கடலை, பேரீச்சம் பழம், மாதுளம்பழம் இவைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.
    • முடி உதிர்தல், சரும நோய்களுக்கு மனஅழுத்தமும் காரணம்.

    பெண்களுக்கு பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றால் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி.

    ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

    பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகை, தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்தச் சிக்கல்களை எளிமையாக சரிசெய்ய முடியும்.

    முடி உதிர்தல், சரும நோய்கள் என பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தமும் காரணம் என்கிறார்கள். புற உலகம் உருவாக்கும் பதற்றம், மனஅழுத்தம் கூந்தலையும் சருமத்தையும் எப்படி பாதிக்க முடியும்? என கேட்கலாம்.

    பொதுவாகவே சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

    உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்கிறார்கள், டாக்டர்கள்.

    • பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது.
    • இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 'அடர்த்தியான கூந்தல்' என்பது பல பெண்களின் ஆசைகளில் ஒன்று. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    முடி உதிர்வு, இயற்கையான நிகழ்வின் ஒரு பகுதியாகும். புதிய முடிகள் வளரும்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு அன்றாடம் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது இயல்பானது. இவற்றைவிட அதிகமாக முடி உதிர்ந்தால், அது கவனிக்க வேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உடல் நலக்குறைவு, மரபு ரீதியிலான பிரச்சினைகள், தூக்கமின்மை, மன அழுத்தம், சத்தான உணவு உட்கொள்ளாதது, ஹார்மோன் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், புதிதாக பிரசவித்த பெண்கள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், தலை முடிக்கு அழுத்தம், இறுக்கம் தரும் வகையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படும்.

    அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வழிகள்:

     புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     இயற்கையாகவே முடியின் வேர்க்கால்களில் இருக்கும் சுரப்பிகள் எண்ணெய்யை சுரக்கும். இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் பூசுவது நல்லது.

     அடிக்கடி தலை வாரினால் முடிகள் உடைவதுடன் அடர்த்தியும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் சீப்பு, துண்டு, தலையணை உறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமான தலைமுடியை சீப்பு கொண்டு வாருவது கூடாது.

     வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சருமத்தைப் போலவே தலைமுடியும் புறஊதாக் கதிர்கள் மற்றும் வாகன மாசுக்களால் பாதிக்கப்படும். எனவே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

     மன அழுத்தம் அல்லது கர்ப்பம் போன்றவற்றால் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முடி உதிர்வு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தானாகவே நின்றுவிடும்.

     இறுக்கமான ஜடை, போனிடெயில் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தும் சிகை அலங்கார முறைகளை தவிர்த்தால், முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

    • ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன.
    • அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

    முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

    சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

    முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.

    முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம்.

    வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.

    ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்.

    • கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
    • கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

    இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது. இதை தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனால் இதற்கு நம் ஆயுர்வேதத்தில் செலவில்லாமல் சிகிச்சை உள்ளது, அது பற்றி பார்க்கலாம்.

    கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

    உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டால், முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றலாம். சொட்டை தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, அது பரவாமல் தடுக்கிறது. ஆக கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.

    கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது.

    • நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான்.
    • கூந்தலை அடிக்கடி அலசுவது நல்லது.

    நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான். ஆனால், அதற்குக் சீரான கேசப் பராமரிப்பும், ஊட்டச்சத்து உணவுகளும் மிக அவசியம். கூந்த வளர்ச்சிக்கு உதவக்கூடிய அடிப்படை பராமரிப்பு வழிகளை இங்கு பார்க்கலாம்.

    தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்றால், அதற்கு அதைச் சரியான நேரத்தில் ட்ரிம் செய்வதும் அவசியம். கூந்தல் வளர்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அது ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதனால் சீரிய இடைவெளியில், குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது, கூந்தலின் நுனிப்பகுதியில் கிளை பிரிந்திருக்கும் பலவீனமான பாகத்தை (Split Ends) வெட்டிவிடுவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம், அந்த ஸ்பிளிட் எண்ட்ஸ் மேல்நோக்கிப் பரவுவதைத் தடுக்கலாம்.

    கூந்தலை அடிக்கடி அலசுவது நல்லது. தலையில் அழுக்கு, பிசுபிசுப்பு சேர்ந்தால் கூந்தலின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் பாதிக்கப்படும். வெளியில் சென்று வந்தாலோ, அழுக்காக இருப்பதாய் உணர்ந்தாலோ உடனடியாகத் தலையை அலசவும். மென்மையான ஷாம்பூகளைப் பயன்படுத்துவதும், கண்டிஷனர்கள் உபயோகிப்பதும் மிக நல்லது.

    நல்ல தரமான கூந்தல் பிரஷ்களைப் பயன்படுத்துவது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியப் பகுதியாகும். கூந்தலின் ஆரம்பப் பகுதியில் ஆரம்பித்து நுனிப் பகுதி வரை மென்மையான பிரெஷ்களைக் கொண்டு சீவ வேண்டும். மேலும், ரத்த ஓட்டத்தை தூண்டும் வகையில் ஸ்கால்ப்பில் சீப்பைக் கொண்டு மிருதுவாக சீவுவதை வழக்கமாக்கவும். முடிந்தவரை கூந்தலை சிக்கு விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் கூந்தல் பாதிப்படையாமல் தடுக்கப்படும்.

    வழக்கமாக கூந்தலுக்கு செய்யும் ஷாம்பூ, எண்ணெய் மற்றும் கண்டிஷனர் பராமரிப்புடன் கூடுதலாக சில விஷயங்களைச் செய்வது கூந்தலின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவும். 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதை உச்சந்தலையில் மசாஜ் செய்து, பின் கூந்தலின் நுனி வரை தடவவும். 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்கவும். இதில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் கூந்தல் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். மேலும், கூந்தல் பலம் ஆகும்; உதிர்வதும் குறையும். இதை வாரத்துக்கு ஒரு முறையாவது செய்து வரலாம்.

    • எப்போதுமே முடியின் வேரின் எண்ணெய் பசை இருக்கும்.
    • ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும்.

    நம்மில் பலரும் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை பயன்படுத்துகிறோம். உங்களுடைய மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப ஷாம்பூவையும் கண்டிஸ்னரையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எந்த ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்தினாலும், அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். அதேபோன்று ஒரே தன்மை கொண்ட ஷாம்பூ தான், ஆனால் பிராண்டு வேறு. அனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்கிற முடிவு ஆபத்தாக அமையும். எனினும் வாங்குவதற்கு முன்னர், நன்கு ஆய்வு செய்துவிட்டு ஒரு பிராண்டை மட்டும் முடிவு செய்யுங்கள். என்ன இருந்தாலும் ஷாம்பூவை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது முடி உதிர்வதை தடுக்காது.

    நீங்கள் வெளியில் அலைந்து திரிபவராக இருந்தால், தினசரி ஷாம்பூ பயன்படுத்தலாம். மேலும் நமது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மாசுபாடு அதிகமாக நிலவுகிறது. இதனால் தூசி, துகள் தலை முடியில் ஏற்படும். தினமும் வெளியில் அலைபவர்கள், சூரியன் வெப்பத்துக்கு வெளிப்பட நேரிடும். இதனால் தலையில் வியர்வை அதிகளவில் சுரக்கும். இதையொட்டி தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்வது நன்மையாகவே அமையும். அதுதவிர, ஷாம்பூவை தினமும் பயன்படுத்த முடியாது என்றால், தினசரி உடற்பயிற்சி செய்யலாம். ஈரப்பதமில்லாத பகுதிகளில் வாழ்பவர்களும் தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளிக்கலாம்.

    ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும். தலையில் படிந்துள்ள தூசு, துகள், எண்ணெய் பசை, பொடுகை உள்ளிட்டவற்றை நீக்குவதற்கு தான் ஷாம்பூ. எப்போதுமே முடியின் வேரின் எண்ணெய் பசை இருக்கும். அதனால் ஷாம்பூவை பயன்படுத்துவதில் கவனம் தேவை. முடியின் இடையில் விரல்களை விட்டு, உள்ளங்கையை கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். மேலும் கேசத்தின் வேரை நன்றாக தேய்து கழுவிட வேண்டும். நகங்களை வைத்து உச்சந்தலையை கழுவுவதை தவிர்க்க வேண்டும். ரொம்பவும் ஈரப்பதமாக உச்சந்தலையை வைத்திருக்கக் கூடாது. முடியின் முனைகள் மிகவும் உலர்ந்து போவதை தவிர்க்க கண்டிஷ்னர் பயன்படுத்தலாம்.

    • சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.
    • கூந்தல் உதிர்வு கட்டுப்படும்.

    நமக்குத் தெரியாத பல அழகு ரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர். கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பல நுாற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரிசி கழுவும் நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

    தயாரிக்கும் முறை:

    அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம். அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து 'நொதித்தல்' முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும். தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை காற்று புகாத பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். இதை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

    பயன்படுத்தும் முறை:

    தலை முடி: தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளித்தபின்பு, அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து, சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். முடி உதிர்வு கட்டுப்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    சருமம்: அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, செல்கள் புத்துணர்ச்சி பெறும். சருமப் பொலிவு அதிகரிக்கும். இதில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு, முகப்பரு, தோல் அழற்சி ஆகியவற்றை நீக்கும். தூய்மையான பருத்தித் துணியை அரிசி நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால், சருமத் துளைகள் இறுகி, மேனி செம்மையாகும். அரிசி நீரில் உள்ள துவர்ப்புத் தன்மை, எண்ணெய்ப் பசையைக் குறைத்து முகப்பருவைத் தடுக்கிறது. தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், சிறிது அரிசி நீரைக் கலந்து தடவும்போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இளமைப் பொலிவு அதிகரிக்கும்.

    • தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம்.
    • சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது.

    தலை முடியைப் பராமரிப்பதற்கு காலங்காலமாக பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்று சீயக்காய். இன்று நம்மைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் சுற்றுச் சூழல் மாசு, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவை முடி உதிர்தல் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றன. இதைத் தடுப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும், இயற்கையான மற்றும் எளிமையான முறையே சீயக்காய்த்தூள் பயன்பாடு ஆகும்.

    அசாசியா கோன்சின்னா மரத்தில் இருந்து பெறப்படும் சீயக்காய், வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது. தீமை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லாதது.

    சீயக்காய் பயன்படுத்துவதால் தலைப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இன்றைய சூழல் சீர்கேடுகளால் முடியில் ஏற்படும் அமில, கார சமநிலை மாற்றம் சீராகும். பொடுகு நீங்கும். சொறி, சிரங்கு, படை, கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும்.

    முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை சீயக்காய்த்தூள் பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கலாம். தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வது, இளநரை, அரிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்

    செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, காய்ந்த நெல்லி, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்தப் பொடியை உபயோகப்படுத்தி குளித்தால் கூந்தல் பொலிவுடன் இருக்கும்; வளர்ச்சி அதிகரிக்கும்.

    சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. அதே நேரம் தேவையான எண்ணெய்ப் பசையை இருத்தி இயற்கையான ஒரு கண்டிஷனராகவும் இது செயல்படும். சீயக்காய் பயன்படுத்திய பின்பு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது.

    சீயக்காயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் லைட்டமின் சி மற்றும் டி, சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

    • கொய்யா இலையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது.
    • கொய்யா இலையை சருமம், கூந்தலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து அதன் பரவலை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர பருக்கள் மறையலாம்.

    கொய்யா இலையில் அதிக அளவில் வைட்டமின் சி சத்து இருப்பதால் முகப்பரு உருவாவதை தடுக்கிறது. கொய்யா இலையில் இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை மாற்றுகிறது.

    கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.

    கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.

    கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.

    கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி பலம் பெறும்.

    கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். மேலும் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

    • தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும்.
    • பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது.

    பேன்கள் நமது தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் முடியுடன் ஓட்டிக்கொள்கிறது. மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேன் முடியின் வழியாக மற்றொருவருக்கு பரவுகிறது.

    பேன்கள் கருப்பு, பழுப்பு, மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் இரவு நேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

    பேன்கள் 3 வகை பேன்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. பேன்கள் மற்றொருவருக்கு மாற படுக்கைகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்களால் முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊறவைத்து கழுவவும். இதனால் பேன்களை அகற்றி பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

    தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது போன்களை அழிக்க உதவும். குறைந்தது அரைமணி நேரம் கழித்து முடிக்கு அடியில் இருக்கும் பேன்கள் வெளியே வரும். இப்போது மெல்லி குறுகிய சீப்பு கொண்டு முடியை சீவவும். இதனால் அனைத்து பேன்களும் வெளியே வரும்.

    அத்தியாவசிய எண்ணெயில் நச்சுகள் உள்ளன, அவற்றை நேரடியாக முடிக்கு பயன்படுத்தக்கூடாது. இவை மற்ற எண்ணெய்களுடன் கலக்கப்பட வேண்டும். தேயிலை மர எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், வேம்பு, யூகலிப்டஸ், மிளகுத்தூள், ஜாதிக்காய் எண்ணெய் போன்ற எண்ணெகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து இந்த எண்ணெயில் ஏதேனும் ஒன்றை தலைமுடிக்கு தடவி 10 மணிநேரம் ஊறவிட்டு விடுங்கள். பின்னர் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

    ×